மிரட்டும் டெங்கு- நிலவேம்பு கசாயத்தை நாடும் பொதுமக்கள்
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளதால் நில வேம்பு கசாயத்தை பருகுவோர் அதிகரித்துள்ளனர்.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளதால் நில வேம்பு கசாயத்தை பருகுவோர் அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2012ம் கால கட்டத்தில் ஏடிஎஸ் கொசுக்களின் பெருக்கத்தால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அப்போது முதல் ஆண்டுதோறும் இந்த காய்ச்சல் பரவி பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தி வருகிறது.

கோடை காலத்தில் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தொடர் நடவடிக்கையால் காய்ச்சல் கட்டுக்குள் இருந்தாலும் இந்தாண்டு முதல் மீண்டும் டெங்கு பரவி வருகிறது.
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் 2012ம் வருட சம்பவம் திரும்பி விடக்கூடாது என்பதில் சுகாதார துறையினர் தீவிரமாக இருக்கின்றனர்.
பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் நேரிடையாக பார்வையிட்டு மருந்து தெளித்து வருகின்றனர். ஆனாலும் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
Recommended Video

இதனால் சித்த மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாள்தோறும் அதிகாலையில் 5 மணி முதலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அரசு சித்த மருத்துவமனைக்கு படையெடுத்து இலவசமாக வழங்கப்படும் நில வேம்பு கசாயத்தை வாங்கி பருகி வருகின்றனர்.
இது போல் தனியார் மருத்துவமனை கடைகளிலும், சித்த மருந்து கடைகளிலும் நிலவேம்பு பொடியை வாங்கி செல்வோர் அதிகரித்து வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications