தமிழக கூட்டுறவு வங்கிகளில் விஐபிகளின் கறுப்பு பணம் வெள்ளையாகிறதா? மத்திய உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
தமிழக கூட்டுறவு வங்கிகளில் கறுப்பு பணம், வெள்ளையாக்கப்படுவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது
சென்னை: தமிழக முழுவதும் உள்ள அனைத்து வகையான கூட்டுறவு விவசாய வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் சங்கங்கள் மூலம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் பண பரித்தனை நடந்து வந்துள்ளது.
இந்த நடைமுறையை பயன்படுத்தி கறுப்பை வெள்ளையாக்க தமிழக அமைச்சர்கள் சிலர் திட்டமிட்டிருந்தனர் என கூறப்படுகிறது. இதனை மோப்பம் பிடித்த மத்திய உளவுத்துறை டெல்லிக்கு தகவல் அனுப்பியது. இதன் அடிப்படையில் தான் கூட்டுறவு வங்கிகளுக்கு கட்டுப்பாடு விதித்து சுற்றறிக்கை கொடுத்ததாம் ரிசர்வ் வங்கி.

இந்த நிலையில், பழைய தாட்களை மாற்ற முடியாத சூழல் எழுந்த நிலையில், கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையை நடத்திய அமைச்சர் செல்லூர் ராஜு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து பேட்டியளித்தார்.
இந்த ஆலோசனை நேற்று காலையில் நடந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் இரவு உயரதிகாரிகளுடன் தாஜ் ஹோட்டலில் முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளார் அமைச்சர். அதில் தான் நிறைய யோசனைகளை தெரிவித்திருக்கிறார்கள் அதிகாரிகள். அந்த யோசனையின் முதல் கட்டம் தான் அமைச்சர் வெளிப்படையாக பேட்டி அளித்தது. மறைமுக யோசனைகளை செயல்படுத்த காரியங்கள் வேகமெடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications