ராஜிவ் கொலை: 7 தமிழர்களை விடுதலை செய்ய ஜெ.க்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜிவ்காந்தி கொலையாளிகளை மனித உரிமை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுத்துள்ள கோரிக்கை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 வருடங்களாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் நளினி ஆகியோரை மனிதநேய அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

International human rights forum wants Rajiv killers to be released from jail

சாந்தன் உள்ளிட்டோரின், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் 2014ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதியன்று குறைத்தது. அதற்கு அடுத்த நாளே, சட்டமன்றத்தை கூட்டிய தாங்கள், இவர்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம், 432/433-ன் கீழ் விடுதலை செய்வதாக அறிவித்தீர்கள். அன்று தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் முதல்வர் அம்மாவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டோம்.

அந்த விடுதலை அறிவிப்பை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினராக நாங்கள் மகிழ்சியுடன் வரவேற்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+