3001 மாணவர்கள் ஒரே நேரத்தில் செய்த யோகா! லிம்கா சாதனை!!
சென்னை: உலக யோகா தினத்தை முன்னிட்டு சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி மாணவர்கள் 3001 பேர் பங்கேற்ற மாபெரும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வேலம்மாள் பள்ளியில்
இந்த வகையில் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 10 வயது முதல் 12 வயதுடைய 3001 மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

வண்ணமயமான நிகழ்ச்சி
3001 மாணவர்கள் பல வண்ண உடைகளை அணிந்து மிகப்பெரிய மைதானத்தில் ஒரே நேரத்தில் யோகா செய்தது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

யோகா விழிப்புணர்வு
இன்றைய சூழலில் உடலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

லிம்கா சாதனை
மாணவர்களின் இந்த யோகா நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications