எண்ணூரில் முதலாவது திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்க ஐ.ஓ.சி. ஒப்புதல்
சென்னை: சென்னை எண்ணூரில் ரூ5,150 கோடி மதிப்பிலான திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைப்பதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐ.ஓ.சி.) நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.ஓ.சி தலைவர் மற்றும் நிர்வாக மேலாளர் பி அசோக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐ.ஓ.சி. போர்டானது எண்ணூர் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு ஆலோசகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்திட்டத்துக்காக நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முனையமானது 5 மில்லியன் டன் கொள்ளளவு கொண்டது. எண்ணூரில் விரைவில் இந்த திட்டத்தைத் தொடங்குவோம்.
கிழக்கு கடலோரப் பகுதியில் ஐ.ஓ.சி. அமைக்கும் முதலாவது முனையம் இது.

இவ்வாறு அசோக் கூறினார்.
எண்ணூர் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.ஓ.சியும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.

இந்த திரவ இயற்கை எரிவாயு முனையமானது 2017ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications