எண்ணூரில் முதலாவது திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்க ஐ.ஓ.சி. ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எண்ணூரில் ரூ5,150 கோடி மதிப்பிலான திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைப்பதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐ.ஓ.சி.) நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.ஓ.சி தலைவர் மற்றும் நிர்வாக மேலாளர் பி அசோக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐ.ஓ.சி. போர்டானது எண்ணூர் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு ஆலோசகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்திட்டத்துக்காக நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முனையமானது 5 மில்லியன் டன் கொள்ளளவு கொண்டது. எண்ணூரில் விரைவில் இந்த திட்டத்தைத் தொடங்குவோம்.

கிழக்கு கடலோரப் பகுதியில் ஐ.ஓ.சி. அமைக்கும் முதலாவது முனையம் இது.

இவ்வாறு அசோக் கூறினார்.

எண்ணூர் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.ஓ.சியும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.

ioc

இந்த திரவ இயற்கை எரிவாயு முனையமானது 2017ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+