ஹேக் செய்யப்பட்டதா ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட்? அதிர்ச்சியில் ரயில் பயணிகள்
சென்னை: இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்பொரேசன் (IRCTC) வெப்சைட் ஹேக் செய்யப்பட்டதாகவும், சுமார் 1 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அதை, ஐ.ஆர்.சி.டி.சி மறுத்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட் வாயிலாகத்தான் ஆன்லைனில் சுமார் 1 கோடிக்கும் அதிக ரயில் பயணிகள் டிக்கெட் புக் செய்கிறார்கள். வாடிக்கையாளர்கள் தங்களின் பான் நம்பர் உள்ளிட்ட தகவல்களை இந்த வெப்சைட்டில் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட்டில் இருந்து தகவல்கள் திருடப்பட்டு, கார்பொரேட் நிறுவனங்களுக்கு அவை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்று இச்செய்தியை வெளியிட்டது.
மகாராஷ்டிர மாநில அரசிடம், ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு இதுகுறித்து தகவல் தெரிவித்து, காவல்துறையை உஷார்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும், அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதை மாநில கூடுதல் தலைமை செயலாளர், கே.பி.பக்ஷி உறுதி செய்ததாகவும் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.
அதேநேரம், இந்த செய்தியை ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் மறுத்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி மக்கள் தொடர்பு அதிகாரி, சந்தீப் தத்தா இதுகுறித்து கூறுகையில், ரகசிய தகவல்களை ஹேக் செய்ய முயன்றதாக கூட எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இருப்பினும், சைபர் செல் துறையிடம், இதுகுறித்து புகார் கூறியுள்ளோம். அவர்கள் விசாரித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒருவேளை தகவல்கள் திருடப்பட்டிருந்தால், அதுதான் இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய டேட்டா திருட்டாக அமையும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications