ஜேடிஎஸ் மதச்சார்பற்ற கட்சியா .. யார் சொன்னது ? : பத்திரிகையாளரை திணறடித்த சித்தராமையா
மதச்சார்பற்ற ஜனதா தளம் மதச்சார்பற்ற கட்சியா .. யார் சொன்னது என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு: தேவ கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், மதச்சார்பற்ற கட்சி என்று யார் சொன்னது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பத்திரிகையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்திற்கான சட்டசபைத் தேர்தல் வருகிற மே 12ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிரசாரங்கள் மாநிலம் முழுவதும் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற பாஜக கடுமையாக முயற்சி செய்து வருகிறது.

அதேநேரம் ஏற்கனவே, ஆட்சியில் இருக்கும் காங்கிரஸும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரண்டு கட்சித் தலைவர்களும் தொடர் பிரசாரக் கூட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் இந்தத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காது. நாங்கள் மதச்சார்பற்ற கட்சி என்று குறிப்பிட்டார்.
CM Siddaramaiah: We are not going to enter into an alliance with any party. We are a secular party.
— ANI (@ANI) April 20, 2018
Reporter: But Janata Dal(S) is also secular
CM Siddaramaiah: Who told you JDS is a secular party? #KarnatakaElections2018 pic.twitter.com/AsDrc7JAvc
இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர், மதச்சார்பற்ற ஜனதா தளமும் மதச்சார்பற்ற கட்சி தானே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளம் மதச்சார்பற்ற கட்சியா.. உங்களுக்கு இதை யார் சொன்னது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பத்திரிகையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications