ஜனாதிபதிக்கு காலக்கெடுவே விதிக்க கூடாது என்பதா? துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு திமுக கடும் கண்டனம்
சென்னை: உச்சநீதிமன்றமானது ஜனாதிபதிக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கக் கூடாது; உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்துள்ளதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
மாநில அரசின் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் மற்றும் நாட்டின் ஜனாதிபதி முடிவெடுக்க காலவரையறை செய்தும் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. ஆனால் ஜனாதிபதிக்கு எப்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையானது.
இது தொடர்பாக திமுகவின் முரசொலி நாளேட்டில் எழுதப்பட்டுள்ள தலையங்கம்: தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பு ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வை நிலைகுலைய வைத்துள்ளது. அவர்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தை விமர்சிக்க முடியாமல், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை இறக்கி விட்டுள்ளார்கள்.

துணை ஜனாதிபதி சொன்னது என்ன?
"மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவரை வழிநடத்தும் சூழ்நிலை ஜனநாயகத்தில் இருக்க முடியாது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவருக்கு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது" என்று பேசி இருக்கிறார் துணை குடியரசுத் தலைவர்.
யோசிப்பதை எல்லாம் பேசும் ஜெகதீப் தன்கர்
"குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது" என்று எதன் அடிப்படையில் சொல்கிறார் தன்கர்? இப்படிச் சொன்னவர், இப்படிச் சொல்கிறது அரசமைப்புச் சட்டம் என்று சொல்லி இருந்தால், அதனை எடுத்துப் படித்துப்பார்த்து விட்டு தன்கரை பாராட்டலாம். ஆனால், தன்கர் தான் யோசித்ததை எல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறார்.
அரசியல் அமைப்பு சட்டம் அப்படி சொல்கிறதா?
இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு யாரும் உத்தரவு போட முடியாது என்று அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறதா? இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று அரமைப்புச் சட்டத்தில் இருக்கிறதா? இரண்டுக்கும் பதில், 'இல்லை' என்பதுதான். பிறகு எதை வைத்துக் கொண்டு, 'குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது' என்று சொல்கிறார் தன்கர்?
குடியரசுத் தலைவர் தனக்கு முன்னால் வரும் சட்ட மசோதாக்களை மூன்று மாதங்களுக்குள் முடிவெடுத்துச் சொல்லவேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்த்திவாலா, மகாதேவன் அமர்வு சொன்னதில் என்ன குறையைக் கண்டீர்கள்? 'மூன்று மாதம் என்பது குறைவானது, ஆறு மாதம் வைத்துக் கொள்ளுங்கள்' என்று கேட்டால் கூட அதில் நியாயம் இருக்கலாம். ஆனால் கால நிர்ணயம் செய்யவே கூடாது என்று சொல்வது என்ன சட்டம்? நியாயம்? நீதி?
தன்னாட்சி அதிகார அமைப்பு
இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147-இன் கீழ் எழுதப்பட்டுள்ளன. தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு ஆகும். எவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டாலும் அதில் தலையிடும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. அரசமைப்புச் சட்டப் பிரிவு 131 இன் கீழ், இந்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டால், மாநிலங்களுக்கு இடையில் பிரச்சினை எழுந்தால் அதன் மீது முடிவெடுக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.
நீதித்துறை அதிகாரம்
அரசமைப்புச் சட்டத்தை ஆய்வு செய்யும் அதிகாரம், அதனை வரையறுத்தல், விளக்கம் அளித்தல் ஆகியவை உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. எந்த உயர்நீதிமன்றத்தின் எந்தத் தீர்ப்புக்கும் மேல்முறையீடு செய்யப்பட்டால் அதனை விசாரிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கிறது.
குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தலை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. பிரிவு 143 இன் கீழ் ஒன்றிய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் பல்வேறு காலக்கட்டங்களில் அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் வழங்கி உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் பொறுப்பு என்ன?
அரசமைப்பை பாதுகாக்கும் அதிகாரமும் பொறுப்பும் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது. அதனால்தான் நீதிபதிகள் பல்வேறு காலக்கட்டங்களில் அரசமைப்பு சட்டத்தின் பக்கத்தில் நின்று கேள்வி கேட்கிறார்கள். நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ, உயர்நீதி மன்றங்களிலோ சட்ட முரணான தீர்ப்புகள் வழங்கப்பட்டால் அதனை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படாத அதிகாரங்களை நாடாளுமன்றமானது உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கலாம்.
உச்சநீதிமன்றமும் 142-வது பிரிவும்
இந்த வரிசையில் உள்ள முக்கியமான அதிகாரம்தான் பிரிவு 142 ஆகும்.
"அரசமைப்புச் சட்டம் 142 ஆவது பிரிவின்படி உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை ஒப்புதல் தரப்பட்டவையாக நாங்கள் அறிக்கிறோம். நீண்ட காலமாக மசோதாவை நிலுவையில் வைத்திருந்த ஆளுநர், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததன் மூலமாக நேர்மையற்ற செயல் செய்துள்ளார். இது போன்று பஞ்சாப் அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்- றம் ஒரு தீர்ப்பை தந்தது. அன்றைய தினம், குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். எனவே, மசோதாக்கள் மறுபரிசீலனைக்கு எப்போது தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்டதோ, அந்த நாளில் இருந்தே அவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றன"என்று உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஜே.பி.பார்த்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு தீர்ப்பு அளித்தது.
பாஜக சதி அரசியல்
"அரசியல் சாசனம் பிரிவு 142 இன் படி முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான எந்தத் தீர்ப்பையும் அல்லது உத்தரவையும் உச்சநீதிமன்றம் வழங்கலாம்." என்று உச்ச நீதிமன்றத்தின் அந்த அமர்வு சொன்னது. இது பா.ஜ.க.வின் சதி அரசியலை ஆட்டம் காண வைத்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பதிலடி
தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசமைப்பு சட்டத்துக்கு தான் உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு தருகிறது. அதுகூட பொறுக்கவில்லை தன்கருக்கு.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், "மக்களாட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசை நடத்த வேண்டும், அலங்கார நியமனப் பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் அல்ல. எந்தத் தனிநபரும், அது எத்தகைய உயர் பொறுப்பில் இருப்பவரானாலும் அவர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். இதைத்தான் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது."என்று மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.
மத்திய அரசு மசோதாவை ஜனாதிபதி நிறுத்தி வைத்தால்?
ஆளுநர்களும் குடியரசுத் தலைவரும் அமைச்சர்கள் குழுவின் 'உதவி மற்றும் ஆலோசனை'யின் பேரில்தான் செயல்படுகிறார்கள். செயல்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் ஆகும். சட்டமன்றங்களால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டத்தை, ஆளுநர்கள் நிறுத்தி வைப்பதைப் போல, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்தால் என்ன ஆகும்? நிறுத்தி வைக்க அனுமதிப்பார்களா ஒன்றிய ஆட்சியாளர்கள்? இவ்வாறு திமுகவின் முரசொலி நாளேடு கேள்வி எழுப்பி உள்ளது.
-
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி











Click it and Unblock the Notifications