3 மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் காலூன்றி விட்டது.. தமிழகத்திற்கு தேவை ஜனாதிபதி ஆட்சி: சு.சுவாமி
சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வேரூன்றி விட்டதாக பாஜக உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டர் மூலம் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது: இறுதியாக நமது அரசு, ஐஎஸ்ஐஎஸ் செயல்பாடுகளை கவனத்தில் கொள்ள ஆரம்பித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை இந்தியாவில் இருந்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமானால், ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழகத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டியது அவசியம். அமெரிக்கா, இஸ்ரேலுடன் இந்தியா இணைந்து இதை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அடிக்கடி ஐஎஸ்ஐஎஸ் கொடி பறக்கவிடப்படுவதை மனதில் வைத்தும், குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனுக்கு ஆதரவாக அம்மாநில எம்.எல்.ஏ ஒருவரே பேரணி நடத்தியதையும் வைத்து சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல, யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை தமிழகத்தில் செயல்படும், சில இஸ்லாமிய அமைப்புகள், சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்ததையும் குறிப்பிட்டு சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு தெரிவித்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த யூகத்தை மெய்ப்பிக்கும் வகையில், அவரது மற்றொரு டிவிட் அமைந்துள்ளது.
'தமிழகம் அமைதியை விரும்பும் மாநிலம். அதற்கு ஏன் குடியரசு தலைவர் ஆட்சி அவசியம்' என்ற தொனியில் ஒரு டிவிட்டர் ஃபாலோவர் கேட்ட கேள்விக்கு, சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள பதிலில் "இல்லை. தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் ஐஎஸ்ஐஎஸ் வேரூன்றிவிட்டது. எல்டிடிஇ அமைப்பில் இருந்தவர்கள் ஆதரவு இதற்கு உள்ளது" என்று கூறியுள்ளார்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications