அதி நவீன 'இன்சாட்-3டி.ஆர்.' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ #isro
சென்னை: இன்சாட்-3டிஆர் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதற்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று (புதன்கிழமை) காலை 11.10 மணிக்கு தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்சாட்-3டிஆர் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியாவின் 10-வது 'ஜி.எஸ்.எல்.வி' ராக்கெட் ஆகும்.

மாலை 4:10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், ராக்கெட் ஏவும் நேரம் 40 நிமிடம் தள்ளிவைக்கப்பட்டு 4.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்படும் செயற்கைகோள் 'இன்சாட்-3டிஆர்' வானிலை, பருவநிலை மாற்றம் தொடர்பான தகவல்களை பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 'இன்சாட்-3டிஆர்' செயற்கைகோள் அதிநவீன வகையில் வானிலை தொடர்பான தகவல்கள், கடல்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், ராணுவத்துக்கு தேவையான தகவல்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
GSLV FO5 INSAT-3DR launched successfully from the Satish Dhawan Space Centre, Sriharikota pic.twitter.com/YWg1NXBEbI
— MIB India (@MIB_India) September 8, 2016
இந்த செயற்கைகோளின் எடை 2,211 கிலோ ஆகும். பூமியில் இருந்து இந்த செயற்கைகோள் 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும். இந்த செயற்கைகோளில் நவீன பேட்டரிகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
ராக்கெட் வெற்றிகரமான விண்ணில் சீறிப் பாய்ந்ததும், சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் கை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தியதோடு, ஒருவருக்கொருவர் கை கொடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications