தெளிவான வானம்... பிஎஸ்எல்வி ராக்கெட் சென்றதை செல்போனில் "கிளிக்"கிய சென்னை மக்கள்!
சென்னை: மேகமூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக காணப்பட்டதால், இஸ்ரோ ஏவிய பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் வானில் சீறிப்பாய்ந்த காட்சியை சென்னை மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், அதன் வணிகக் கிளையுமான ‘ஆண்டிரிக்ஸ்' நிறுவனமும் இணைந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் செயற்கை கோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி 625 கிலோ எடை கொண்ட டெலஸ்-1, வெலக்ஸ்-சி1, வெலக்ஸ்-2, அதனாக்சாட்-1, கென்ட் ரிட்ஜ்-1, கிளாசியா ஆகிய 6 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.சி. சி-29 ராக்கெட் மூலம் நேற்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டன.

.
அப்போது வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக காணப்பட்டதால் ராக்கெட் வானில் சீறிப்பாயும் காட்சி சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் நன்றாக தெரிந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த மக்கள் மொட்டை மாடிகளில் நின்றபடி ராக்கெட்டை ஆர்வத்துடன் ரசித்துப் பார்த்தனர்.
சிலர் தங்களது செல்போனிலும் இந்த நிகழ்வைப் படம் பிடித்தனர். ராக்கெட் சென்ற பாதையின் புகைமூட்டம் வானில் கலைவதற்கு சிறிது நேரம் ஆனது.












Click it and Unblock the Notifications