அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக் இன்று ஆஜராக வருமான வரித்துறை சம்மன்.. ஒட்டப்பட்ட நோட்டீஸ்!
கரூர் : அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று ஆஜராக உத்தரவிட்டு அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக், மின்சாரத்துறை ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26-ஆம் தேதி முதல் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் 5வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். அசோக் குமாருக்கு சொந்தமாக கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அபெக்ஸ் நிறுவன அலுவலகத்துக்கு 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று வந்தனர்.
அபெக்ஸ் நிறுவன அலுவலக கதவுகள் திறக்கப்பட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அசோக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் கரூர் வருமான வரித்துறை அலுவலகத்தில் அசோக் குமார் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அசோக் வீட்டில் வருமான வரித்துறையினர் சம்மன் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
இதையடுத்து, நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்டு அசோக் குமார் தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்தாவது நாளாக ஐடி ரெய்டு தொடர்ந்து வருவதும், வருமான வரி அதிகாரிகள் அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளதும் கரூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications