கருணாநிதி இயல்பிலேயே போர் குணம் கொண்டவர்.. மீண்டு வருவார்.. வைரமுத்து உருக்கம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கவிஞர் வைரமுத்து பேட்டியளித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கவிஞர் வைரமுத்து பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இரண்டாவது நாளாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு சிறுநீரக நோய் தொற்று மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது.

கருணாநிதி மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். வரிசையாக அரசியல் தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து வைரமுத்து பேட்டியளித்துள்ளார்.
கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். கருணாநிதியின் மரபணுக்களிலேயே போர்க்குணம் கலந்துள்ளது.
மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவர் கருணாநிதி. இன்று நோய்க்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த போராட்டத்திலும் அவர் வெல்வார். கண்டிப்பாக அவர் மீண்டு வருவார் என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications