Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும்.." வந்து விழுந்த கேள்வி? சசிகலா பதில் இதுதான்

Subscribe to Oneindia Tamil

நாகை: மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் இடம் சட்டசபை. எனவே, மக்கள் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் தாராளமாக பேசலாம் என்று சசிகலா கூறினார்.

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சசிகலா நாகை வருகை தந்தார்.

வேளாங்கண்ணியில் உள்ள சொகுசு விடுதியில் தனது உறவினர்களோடு தங்கி இருந்த சசிகலா, மாலையில் திருவாரூருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தாராளமாக பேசலாம்

தாராளமாக பேசலாம்

அப்போது அவர் கூறியதாவது:- மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் இடம் சட்ட சபை. எனவே, மக்கள் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் தாராளமாக பேசலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பேசுவதற்கு உரிமை இருக்கிறது" என்றார்.

யார் கைக்கு சென்றால்

யார் கைக்கு சென்றால்

அப்போது சசிகலாவிடம் அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சசிகலா, "அதிமுக தொண்டர்களிடம் தான் இதை கேட்க வேண்டும்" என்றார். சட்டமன்றத்தில் அதிமுக சார்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை வரவேற்பதாக ஓ பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டது.

 ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா

ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா

இந்த நிலையில், வேளாங்கண்ணியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சசிகலாவை சந்தித்தனர். சட்டசபையில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மோதல் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலையாக அமையாது. அப்படி ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன். ஓ பன்னீர் செல்வம் என்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்

அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்

எங்களுடைய கட்சிக்காரர்கள் இடையே வித்தியாசம் ஒன்றும் நாங்கள் பார்ப்பது கிடையாது. கண்டிப்பாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். தற்போது அதிமுகவின் தோல்விக்கு பிரிந்து இருப்பது ஒன்று தான் முக்கியமான காரணம் ஆகும். அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+