ஆதரவு தருமாறு ஜெ.தீபா பேரவை நடிகர் ஆனந்த்ராஜ்க்கு அழைப்பு
ஜெ,தீபா பேரவைக்கு ஆதரவு தருமாறு நடிகர் ஆனந்த் ராஜிடம் அக்கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆலோசிப்பதாக ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெ,தீபா பேரவைக்கு ஆதரவு தருமாறு நடிகர் ஆனந்த் ராஜிடம் அக்கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். நடிகர் ஆனந்த்ராஜை நேரில் சந்தித்து ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக பல ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்தவர் ஆனந்த் ராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறவித்தார்.

இந்நிலையில் ஜெ.தீபா பேரவை நிர்வாககிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆனந்த்ராஜின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தனர். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா பேரவைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து போசிய நடிகர் ஆனந்த்ராஜ் ஜெ. தீபா பேரவையின் அழைப்பு குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications