ஜெயலலிதா டிசம்பர் 5ல் தான் இறந்தாரா?...'சிங்கிளாக' வந்து மாதவன் அளித்த பிரமாணப்பத்திரத்தில் கேள்வி?

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ஜெ. தீபாவின் கணவர் மாதவன் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிங்கிளாக வந்து விசாரணை ஆணையத்திடம் மாதவன் புகார்!- வீடியோ

    சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜெ. தீபாவின் கணவர் மாதவன் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனிடம் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

    ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷன் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பிரமாணப் பத்திரங்கள் அளிக்கலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி கூறியுள்ளார்.

    நீதிபதி ஆறுமுகசாமி இன்னும் களத்தில் இறங்கி விசாரணையைத் தொடங்காத நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து இந்த விசாரணை ஆணையத்திற்கு 7 பிரமாணப் பத்திரங்கள் வந்துள்ளன. இந்நிலையில் ஜெ. தீபாவின் கணவர் மாதவன் சென்னை எழிலகத்தில் உள்ள நீதிபதி ஆறுமுக சாமி விசாரணை கமிஷனிடம் 18 கேள்விகள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

    ஜெ. மரணத்தில் சந்தேகம்

    ஜெ. மரணத்தில் சந்தேகம்

    அந்த பிரமாணப் பத்திரத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை என்று, மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் தொடர்பான 18 கேள்விகளையும் ஆணையத்திடம் மாதவன் அளித்துள்ளார். ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி தான் மரணம் அடைந்தாரா என்பதில் மாதவன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

    எம்பார்மிங் ஏன் செய்யப்பட்டது?

    எம்பார்மிங் ஏன் செய்யப்பட்டது?

    டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தால் அடுத்த நாளே இறுதிச் சடங்குகள் நடந்த நிலையில் ஏன் அவருக்கு எம்பார்மிங் செய்யப்பட்டது என்றும் மாதவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதே போன்று ஜெயலலிதா மரணத்தில் வெளிவராத பல உண்மைகள் குறித்தும் மாதவன் ஆணையத்திடம் கேள்வியாக அளித்துள்ளார்.

    தீபா வரவில்லை

    தீபா வரவில்லை

    இந்தப் பிரமாணப் பத்திரத்தை அவர் தன்னுடைய கட்சியினருடன் வந்து தாக்கல் செய்தார். அவருடன் ஜெ. தீபா வரவில்லை, இருவரும் அண்மையில் ஒன்று சேர்ந்த நிலையில் போயஸ் கார்டனில் நள்ளிரவு நடந்த சோதனையின் போது ஜெ. தீபாவுடன் மாதவன் வரவில்லை என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    தீபாவை விட்டு பிரிந்தாரா?

    தீபாவை விட்டு பிரிந்தாரா?

    போயஸ் கார்டன் வீட்டிற்குள் தீபக் வரச் சொன்னதாக சென்று சிக்கலில் மாட்டினார் ஜெ. தீபா. அப்போது தனது கணவர் மாதவன் உதவியை கேட்டார் தீபா, இதனையடுத்து இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் ஒழிந்து இருவரும் தி.நகர் வீட்டில் வசித்து வந்த நிலையில் மீண்டும் இருவரிடையே பிரிவு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+