மக்களால் நான் மக்களுக்காகவே நான்..இது ஜெ.வின் ஸ்லோகன்..உங்களால் நான் உங்களுக்காகவே நான்... எனி கெஸ்?
தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா உங்களால் நான் உங்களுக்காகவே நான் என்ற புதிய ஒரு ஸ்லோகனை பயன்படுத்தி வருகிறார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா உங்களால் நான் உங்களுக்காகவே நான் என்ற புதிய ஒரு ஸ்லோகனை பயன்படுத்தி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தனது இறுதி மூச்சு வரை முழங்கியவர் ஜெயலலிதா. எந்த ஒரு பொதுக் கூட்டத்திலும், தேர்தல் பிரசாரங்களிலும் இந்த ஸ்லோகனை பயன்படுத்தாமல் அவர் இருக்கமாட்டார்.
அவர் இறந்தபோதும் இதே ஸ்லோகன் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதால் மக்கள் அவர் இல்லாததை நினைத்து மனம் நொந்தனர். அவரது பிறந்த நாளன்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,புரட்சி தலைவி அம்மா அவர்களின் பாத சுவடுகளை பின்பற்றி மாநிலம் தழுவிய மக்கள் நல உதவிகள் வழங்கும் விழா...
— J.Deepa (@JDeepaOfficial) February 1, 2018
From 5.02.18 Monday #JDeepa pic.twitter.com/yNyaG6DGT6
இதை வைத்துக் கொண்டு அவர் எப்போது நினைக்கிறாரோ அப்போது தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்தோ அரசியல் தலைவர்ரகளின் கருத்துக்கு எதிர் வினையாற்றுவதோ செய்வார். இந்நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட போகிறார். அதன்படி அவர் தனது டுவிட்டரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,புரட்சி தலைவி அம்மா அவர்களின் பாத சுவடுகளை பின்பற்றி மாநிலம் தழுவிய மக்கள் நல உதவிகள் வழங்கும் விழா... என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் திங்கள்கிழமை முதல் இந்த விழா தொடங்கவுள்ளது. ஜெயலலிதா போல் தோற்றம், நிறம், பாவனை, நிதானமான பேச்சு, ஆங்கில உச்சரிப்பு என்று கலக்கும் ஜெ.தீபா, அத்தையை போலவே தமிழக மக்களுக்காக ஒரு ஸ்லோகனை வெளியிட்டுள்ளார். உங்களால் நான் உங்களுக்காகவே நான்.
இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பிலும் குறிப்பிட்டுள்ளார்.