ராஜம்மாளுக்கு என்னை தெரியாதாம்.... தீபக்கை மட்டும் தெரியுமாம்... வேடிக்கையா இருக்கே...ஜெ.தீபா
ராஜம்மாளுக்கு என்னை தெரியாது, ஆனால் தீபக்கை மட்டும் எப்படி தெரியும் என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ராஜம்மாளுக்கு என்னை தெரியாது, ஆனால் தீபக்கை மட்டும் எப்படி தெரியும் என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவருடன் நெருங்கி பழகியவர்கள் என 22-க்கும் மேற்பட்டோருக்கு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி விட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெ.வீட்டு சமையலர் ராஜம்மாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் ஆஜராகினார். அப்போது அவர் ஜெ.தீபாவை யாரென்றே தெரியாது என்றும் அவரை போயஸ் தோட்டத்தில் இதுவரை பார்த்ததில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் போயஸ் தோட்டத்தில் அவரை .யாரும் தாக்கவில்லை என்றும் அவர் கூறுவது போல் அடியாட்களும் இல்லை என்றும் ராஜம்மாள் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதுகுறித்து ஜெ.தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமையல் வேலை செய்யும் ராஜம்மாள் உயிருக்கு பயந்தோ அல்லது ஆதாயத்திற்காகவோ என்னை தெரியாது என பொய் சொல்லியிருக்க வேண்டும். அவர் கடந்த 1996-இல் சசிகலாவால் நியமிக்கப்பட்ட வேலையாள். எனது அத்தையால் 1998-இல் போயஸ் கார்டனை விட்டு துரத்தப்பட்ட ராஜம்மாள் மீண்டும் சசிகலாவால் உள்ளே சேர்க்கப்பட்டார்.
நிச்சயம் ராஜம்மா கூறுவதில் துளி கூட உண்மை இல்லை. காரணண் என்னை யாரென்றே தெரியாது எனக் கூறும் அவர் என் சகோதரர் தீபக்கை தெரியும் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. நானே ராஜம்மாவை 1996 காலகட்டத்தில் நேரில் பார்த்துள்ளேன். அவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து மக்களை முட்டாள் ஆக்க நினைக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.
இவர்களது முரண்பட்ட வாக்குமூலங்கள் மூலம் போயஸ் இல்லத்தில் ஏதோ தவறாக நடந்துள்ளது, என்பது தெளிவாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு ஏற்பட்ட நிலையை மக்களாகிய நீங்கள் என்னோடு சேர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.... அம்மாவின் மர்ம மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்... இவர்களது நாடகத்துக்கு விரைவில் மூடு விழா நடத்தி துரோக கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று தீபா கூறியுள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications