நாளை கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த திட்டம்.. இன்றே ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அதிரடியாக கைது
ஆக்கபூர்வமாக செயல்பட்டு மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்க அரசுக்கு உறுதுணையாக இருங்கள் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு நாளை சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மற்றொரு பக்கம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்ட பத்திரிகை விளம்பரங்களில், ஆக்கபூர்வமாக செயல்பட்டு மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்க அரசுக்கு உறுதுணையாக இருங்கள் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, மீன்வளம், பணியாளர், நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் வேண்டுகோள்' என்ற தலைப்பில், அனைத்து நாளிதழ்களிலும் அரசின் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் அரசு நிர்வாகத்தை இயக்குவது, அரசு ஊழியர்கள் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனவும், 2017-2018ம் நிதியாண்டில், மாநில அரசு பெற்ற மொத்த வரி வருவாய் 93 ஆயிரத்து 795 கோடி ரூபாய் என்றும், இதில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பள செலவு மட்டும் 45 ஆயிரத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, 20 ஆயிரத்து 397 கோடி ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications