ஜெ.மரணத்துக்கு விசாரணைக் கமிஷன் அமைத்தால் அதிமுகவில் பாதிப்பேருக்கு சிறை - ஸ்டாலின் - வீடியோ
ஜெ.மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் அதிமுகவில் பாதிப்பேர் சிறையில் தான் இருப்பார்கள் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஈரோடு: ஜெயலலிதா மரணம்குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்தால் அதிமுகவில் பாதிப்பேர் சிறையில் தான் இருப்பார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.
ஈரோட்டில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் மரணம்குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு உள்ளது.
மருத்துமனையில் இறந்ததாகச் சொல்லப்படும் நாளில் தான் அவர் மரணம் தீர்மானிக்கப்பட்டதா? அல்லது அதற்கு 75 நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டாரா என மக்கள் பல கேள்விகளைக் கேட்கின்றனர்.
இதுகுறித்து முறையான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டால் இன்று அதிமுகவில் இருக்கும் பாதிப்பேர் சிறையில் தான் இருக்க நேரிடும் என கூறினார். மேலும் மோடி தமிழக அரசியலில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.