ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் மன்மோகன் அரசு நடவடிக்கை எடுத்தது: பாஜக குற்றச்சாட்டு
சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெறவிடாமல் முந்தைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டு விளையாட்டை முடக்க முந்தைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. எனவே தற்போதைய பாஜக அரசு சட்டத்தை திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

சட்ட சிக்கலை தீர்த்து எப்படி மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டுவருவது என்பது குறித்து ஆய்வு நடக்கிறது. காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதன்மூலமோ அல்லது, அவசர சட்டம் மூலமாகவோ, ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு முயற்சி எடுக்கும் என்றார்.
இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், கட்சி வேறுபாடுகளை மறந்து ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயல வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதியளிக்கும் என நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications