ஜல்லிக்கட்டு ஆதரவு உண்ணாவிரதம்.. வேலூரில் 500 பேர் கைது
வேலூரில் இன்று மாலை சுமார் 500 பேர் தலைமை தபால் நிலையம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவசரமாக வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய சுமார் 500 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும், அதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று மாநிலம் முழுக்க போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அலங்காநல்லூரை மையப்புள்ளியாக வைத்து மாநிலம் முழுக்க போராட்டங்கள் வெடித்து கிளம்பியுள்ளன.

வேலூரில் இன்று மாலை சுமார் 500 பேர் தலைமை தபால் நிலையம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவசரமாக வந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், பஸ் நிலையம் எதிரே இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications