தடையை மீறி திருச்செந்தூரில் மஞ்சுவிரட்டு… 15 பேர் கைது!
தடையை மீறி திருச்செந்தூரில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
திருச்செந்தூர்: பொங்கல் பண்டிகையில் போது 3வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத அளவிற்கு மத்திய அரசு செய்துவிட்டது. இதனால் தடையை மீறி திருச்செந்தூரில் மஞ்சு விரட்டு நடைபெற்றது.
பொங்கல் தினத்தை அடுத்த நாளான உழவர் தினமான இன்று தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. மதுரை விளாங்குடி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்தந்தப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், திருச்செந்தூர் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதனை ஏராளமான இளைஞர்கள் விரட்டிப் பிடித்தனர். இதனையடுத்து 15 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
இதனைப் போன்று, திருச்சி, கல்லணை அருகே உத்தமசீலியில் 50 மாடுகளை இளைஞர்கள் அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டை நடத்தினார்கள். காளைகளுக்கு பூஜை போட்டு மாடுகளை இளைஞர்கள் அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டு நடத்தினர்.












Click it and Unblock the Notifications