ஜல்லிக்கட்டு போராட்டம்... திண்டுக்கல் சீனிவாசனைதெறிக்க விட்ட வாடிப்பட்டி மக்கள்!
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மதுரையில் சாலை மறியல் நடைபெற்ற போது, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய அமைச்சர் தப்பி ஓடினார்.
வாடிப்பட்டி: ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மதுரையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் போராட்டக்காரர்களிடம் சிக்காமல் தப்பி ஓடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கான எந்த முயற்சியையும் இன்னும் மத்திய அரசு செய்யவில்லை. இதனால் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, சாலைமறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா என தொடர்ந்து எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதுரை அருகேயுள்ள அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று காலை 10 மணியளவில் வாடிப்பட்டி அருகில் தனிச்சியம் பிரிவில் ஒன்று திரண்டனர். பின்னர், அவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜல்லிக் கட்டு நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று கோரியும் போராட்டக்காரர்கள் மதுரை - திண்டுக்கல் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கும் பதாகைகளை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
அப்போது, அந்தப்பக்கம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். போராட்டக்காரர்கள் நடத்திய சாலை மறியலால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த போக்குவரத்து நெரிசலில் அமைச்சரின் காரும் சிக்கியது. இதனால் உஷாரான அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்து எஸ்கேப் ஆகி மாற்று வழியில் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார்.
இதனிடையே வாடிப்பட்டி போலீசார், போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேப் போன்று மதுரை அவனியாபுரம் பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி போராட்டம் நடத்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications