நாளை மாலை 5 மணிக்கு... காஞ்சிபுரத்தில் பேசுகிறார் ஜெயலலிதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா நாளை காஞ்சிபுரத்தில் தனது பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை போடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 14 நகரங்களில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த திட்டமிட்டு தற்போது ஒவ்வொரு ஊராகப் போய் வருகிறார் ஜெயலலிதா.

வழக்கம் போல வேனில் நின்றபடியோ அல்லது அமர்ந்தபடியோ அவர் இப்போது பேசுவதில்லை. மாறாக, மேடையில் சேர் போட்டு உட்கார்ந்து பேசுகிறார். சட்டசபையில் 110 அறிக்கையை வாசிப்பது போல அவர் தனது உரையைப் படிக்கிறார்.

Jaya to address in Kanchipuram tomorrow

சென்னையில் கடந்த 9-ம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கினார் ஜெயலலிதா. அதன் பின்னர் விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் அவர் பேசியுள்ளார். இதுவரை மொத்தம் 4 ஊர்களில் பேசி முடித்துள்ளார். இன்னும் 10 கூட்டம் பாக்கியுள்ளது.

இந்த நிலையில் நாளை மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் அருகே உள்ள வாரணவாசியில் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார் ஜெயலலிதா.

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், செய்யார், வந்தவாசி ஆகிய 18 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டவுள்ளார்.

தற்போது ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்ட நெரிசல் அதிகரித்து பலர் காயமடைவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் காஞ்சிபுரம் கூட்டத்திற்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+