தவறான சிகிச்சை.. மேட்டூரில் கண் பார்வை பாதிக்கப்பட்ட 23 பேருக்கும் தலா ரூ. 3 லட்சம் உதவி-ஜெ. உத்தரவு
சேலம்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் தவறான கண் அறுவைச் சிகிச்சையால் பார்வை பாதிக்கப்பட்ட 23 பேருக்கும் தலா ரூ. 3 லட்சம் நிதியுதவு வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 14ம் தேதி ஏழு பேருக்கும், 15ம் தேதி எட்டு பேருக்கும், 16ம் தேதி எட்டு பேருக்கும் என மொத்தம் 23 பேருக்கு கண் புரை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சை முடிந்து, இரு நாட்களுக்கு பின், நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களது கண்களில் ஊற்றுவதற்காக சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ஆனால், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 23 பேருக்கும் கண்ணில் புண் ஆறவில்லை. பார்வையும் பறிபோகத் தொடங்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தவறான ஆபரேசன் காரணமாக கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் பரவியது. எனவே, இதுபற்றி சேலம் மாவட்ட சுகாதாரதுறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்பார்வை பார்வை பாதிக்கப்பட்டுள்ளவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வேலுமணி, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு மீண்டும் கண்பார்வை திரும்ப வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணில் கட்டுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கண் அறுவைச் சிகிச்சையால் பார்வை பாதிக்கப்பட்ட 23 பேருக்கும் தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், இவர்களில் 21 பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications