அம்மா வருகிறார்.. 28ம் தேதி ஏற்காடு தொகுதியில் தீவிரப் பிரசாரம்

ஏற்காடு இடைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக வேட்பாளர் சரோஜாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் படை களம் இறங்கியுள்ளது. திமுகவும் தீவிரப் பிரசார்த்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசார விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை...
4.12.2013 அன்று நடை பெற உள்ள ஏற்காடு சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) அதிமுக வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கண்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
1. பேசும் இடம்: மின்னாம் பள்ளி, (வழி- காரிப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம். பெருமாபாளையம், டோல்கேட்)
2. பேசும் இடம்: வெள்ளாள குண்டம் பிரிவு, (வழி- காட்டுவேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, வாழப்பாடி பிரிவு)
3. பேசும் இடம்: வாழப்பாடி பேருந்து நிலையம், (வழி - பேளூர் சாலை பிரிவு, துக்கியாம் பாளையம், அத்தனூர்பட்டி)
4. பேசும் இடம்: பேளூர் கருமந்துறை பிரிவு ரோடு எம்.ஜி.ஆர். சிலை அருகில், (வழி-பள்ளத் தாதனூர், நடுப்பட்டி)
5. பேசும் இடம்: நீர் முள்ளிக்குட்டை, (வழி- ராஜாபட்டினம், பூசாரிப்பட்டி, அனுப்பூர் பிரிவு)
6. பேசும் இடம்: கூட்டாத் துப்பட்டி, (வழி- சர்க்கார் நாட்டார் மங்கலம், ஏ.என்.மங்கலம், செல்லியம் பாளையம், குள்ளம்பட்டி பிரிவு)
7. பேசும் இடம்: வலசையூர், (வழி-ராமர்கோவில்)
8. பேசும் இடம்: அயோத் தியாப்பட்டினம்
9. பேசும் இடம்: உடையாப்பட்டி












Click it and Unblock the Notifications