ஜெ. முதல்வரானதும் காரில் ஏறிய தேசியக் கொடி!
சென்னை: தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற உடனேயே அவரது காரில் இருந்த அ.தி.மு.க. கொடி அகற்றப்பட்டு தேசியக் கொடி பொருத்தப்பட்டது.
தமிழக முதலமைச்சராக 5 வது முறையாக ஜெயலலிதா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் எளிய முறையில் நடைபெற்றது.

பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்ட போது ஜெயலலிதாவின் காரில் அ.தி.மு.க. கொடி பறந்தது.
ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்த உடனேயே ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரது காரில் இருந்த அ.தி.மு.க. கொடியை அகற்றி விட்டு தேசியக் கொடியை பொருத்தினர்.
பதவியேற்ற பின்னர், தேசியக் கொடி பொருத்தப்பட்ட காரில் ஜெயலலிதா தலைமைச் செயலகத்திற்கு புறப்பட்டார்.
அப்போது வழியின் இரு மருங்கிலும் கூடியிருந்த தொண்டர்கள், உணர்ச்சி மிகுதியில் சென்று கொண்டிருந்த காரின் பக்கவாட்டில் சாலையிலேயே சாஷ்டாங்கமாய் விழுந்து கும்பிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவர்களை தூக்கி விட்டனர்.
இதையடுத்து தலைமைச் செயலகத்திற்கு சென்ற ஜெயலலிதா கையெழுத்திடும் முதல் கோப்பு எது என்ற ஆவல் பலரையும் ஏன், எதிர்கட்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications