For Daily Alerts
Just In
தேர்தல் ஆணையம் நடுநிலையாக இருப்பது போல நடிக்கிறதா?- கருணாநிதி
சென்னை: மோடியை விட தான் சிறந்தவரா என ஜெயலலிதா கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா, அல்லது நடுநிலை போன்று நடிக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
நல்லாட்சி அமைய வேண்டும் என்று நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விட தாம் சிறந்தவர் என ஜெயலலிதா கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, தான் சிறந்தவரா என ஜெயலலிதா கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும் என்றார்.
தேர்தல் ஆணையம் நடுநிலையாக இருப்பது போல தோன்றினாலும் அது ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
Comments
English summary
DMK chief Karunanidhi told press person, Jayalalitha before standing mirror she ask Lady of TN, better administrator than Modi of Gujarat.