அதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் ஜெயலலிதா தேர்வு... !
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
அதிமுகவின் புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் மாவட்ட செயலாளர்களுக்கு இணையான பதவிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது உயர் மட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா மீண்டும் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ். பொன்னையன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைமை நிலையச் செயலாளராக பழனியப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
1989ம் ஆண்டு முதல்
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. அவருடைய மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் இன்னொரு அணியுமாக அதிமுக பிளவுபட்டது. இருப்பினும் பின்னர் இரு பிரிவுகளும் இணைந்து கட்சி ஒன்று பட்டது. 1989ம் ஆண்டு இந்த இணைப்பு நடந்தது. ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications