ஜெ. 68: பச்சை குத்தி, 1500 கிலோ கேக் வெட்டி.. பட்டாசு வெடித்து அதிமுக கொண்டாட்டம்!
வேலூர்: முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு ஆற்காட்டில் நள்ளிரவில் 1,500 கிலோ எடையுள்ள கேக்கை அதிமுகவினர் வெட்டியுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை அதிமுகவினர் நள்ளிரவு 12 மணி முதல் கொண்டாடத் துவங்கிவிட்டனர். கோவில்களில் சிறப்பு பூஜை, கை, மார்பில் அம்மாவின் உருவத்தை பச்சை குத்துதல், கேக் வெட்டுதல் என்று அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஜமாய்த்து வருகின்றனர்.
Celebration at AIADMK HQ #Amma68 pic.twitter.com/78UMBCSP7U
— #Amma68 (@Hariadmk) February 24, 2016
இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் பிரமாண்ட மேடை அமைத்து அதில் 1,500 கிலோ கேக்கை அதிமுகவினர் வைத்தனர். நள்ளிரவு 12 மணி அடித்ததும் நடிகர் வையாபுரி முன்னிலையில் அதிமுகவினர் அந்த மெகா கேக்கை வெட்டினர்.
கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதே போன்று நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் அருகேயும் நள்ளிரவு 12 மணிக்கு 68 கிலோ கேக்கை அதிகமுவினர் வெட்டினர். மேலும் கரூர், தூத்துக்குடியிலும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 68 கிலோ கேக்குகளை வெட்டினர்.
Celebrations at AIADMK Headquarters in Chennai as CM Jayalalithaa turns 68 pic.twitter.com/uk2cfbdbGd
— ANI (@ANI_news) February 24, 2016
சேலத்தில் அதிமுகவினர் நள்ளிரவில் கேக் வெட்டியதுடன் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மேலும் இடைவிடாமல் பட்டாசுகள், வானவேடிக்கைகள் வெடித்து ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications