ஜெயலலிதாவின் பணி தொடர வேண்டும்.. கர்நாடக மாஜி முதல்வர் எதியூரப்பா!
சென்னை: 5வது முறையாக முதல்வராகியுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முதல்வராக தொடர வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எதியூரப்பா கூறியுள்ளார்.
இன்று சென்னை வந்தார் எதியூரப்பா. அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக முதல்வராக 5வது முறையாக பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணி தொடர வேண்டும். நரேந்திர மோடி பிரதமர் ஆகி 1 வருட ஆட்சியை பூர்த்தி செய்துள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மோடி செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டத்தையும் உலக நாடுகள் கவனித்து வருகிறது. உலக நாடுகள் மோடியை உற்சாகப்படுத்துகின்றன. உலகத்திலேயே 2வது பெரிய தலைவராக மோடி உருவெடுத்து வருகிறார். மோடி அரசின் திட்டங்கள் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்றார் எதியூரப்பா.












Click it and Unblock the Notifications