எஸ்.எம்.எஸ். மூலமும் ஓட்டு கேட்கிறார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா இப்போது நாலாபுறமும் தீவிர வாக்கு சேகரிப்பில் மும்முரமாகியுள்ளார்.
ஊர் ஊராக கூட்டங்களில் பேசி வரும் அவர் தற்போது சென்னையில் 3 நாட்கள் புயல் வேகப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

மேலும் செல்போன்களில் அவரது குரல் ஏற்கனவே பிரசாரமாக ஒலித்து வருகிறது. அன்புச் சகோதரி பேசுகிறேன் என்று அன்புடன் அழைத்துப் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா.
அதேபோல எப்.எம். ரேடியோவிலும் ஜெயலலிதாவின் பிரசாரப் பேச்சைக் கேட்க முடிகிறது.
தற்போது அவர் எஸ்.எம்.எஸ் ரூபத்திலும் மக்களை வந்தடையத் தொடங்கியுள்ளார். அந்த எஸ்.எம்.எஸ்ஸில், வணக்கம், இந்தியாவை வல்லரசாக்க 40/40 என்ற இலக்கை அ.தி.மு.க. அடைய இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள். அன்புடன் ஜெ.ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்று வாசகம் உள்ளது.












Click it and Unblock the Notifications