சொன்னதை எல்லாம் ஜெயலலிதா செஞ்சு காட்டணும்: வெங்கையா நாயுடு
சென்னை: தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தொடர்ந்து 2வது முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து 2 முறை வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார்.
மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்தில் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.
தேசிய கட்சியான பாஜக தேசத்தின் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications