கர்நாடக அரசு அப்பீல் செய்தவுடனேயே ஜெ. பதவி விலகியிருக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.
சென்னை: கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவுடனேயே ஜெயலலிதா பதவி விலகியிருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அதிமுக வார்டு செயலாளர் போன்று நடந்து கொள்கிறார். ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தபோது நூறு சதவீத விதிமீறல்கள் நடந்துள்ளது.
பிரதமர் மோடி யோகா மூலம் இந்துத்துவா கருத்துகளை மக்கள் மீது திணிக்க முயன்று வருகிறார். 2016ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த உடனேயே அவர் பதவி விலகியிருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications