Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

15ம் தேதி தேய்பிறையில் முதல்வராக பதவியேற்கும் ஜெ.: அமைச்சரவையில் லேசான மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையானதைத் தொடர்ந்து, தமிழகத்தின் முதல்வராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் 15ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் தேய்பிறையாக இருந்தாலும் வைகாசி பிறப்பு முகூர்த்த நாளாகவும் இருப்பதால் முதல்வராக பதவியேற்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் முதல்வராக பதவியேற்கும் தினத்தில் அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றமும் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் சென்னைக்கு வருமாறு அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மே 13-ஆம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது. இதில், அதிமுகவின் சட்டப்பேரவை குழு தலைவராகவும், முதல்வராகவும் ஜெயலலிதாவை அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாகத் தேர்வு செய்ய உள்ளனர்.

அதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவைச் சந்தித்து, முதல்வர் தேர்வுக்கான கடிதத்தை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொடுப்பர்.

ராஜினாமா செய்யும் ஓ.பி.எஸ்

ராஜினாமா செய்யும் ஓ.பி.எஸ்

இதற்கிடையில் முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வார். இதனையடுத்து வரும் 15ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 14ஆம் தேதியன்று மகம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நாளாகும்.

வைகாசி பிறப்பு

வைகாசி பிறப்பு

மே 15ஆம் தேதி தமிழ் மாதமான சித்திரை முடிந்து வைகாசி பிறக்கிறது. வெள்ளிக்கிழமை நாளான அன்று துவாதசி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகமாகும். தேய்பிறையில் பதவியேற்பது சிறந்தது என்று ஜோதிடர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளதாக போயஸ் தோட்டத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு ஆண்டுகள் நிறைவு

நான்கு ஆண்டுகள் நிறைவு

இதனிடையே 2011 மே 16ஆம் தேதி அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள். சரியாக நான்கு ஆண்டுகள் முடிந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் ஆட்சிக்கட்டிலில் முதல்வராக அமர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் ஜெயலலிதா. எனவேதான் 17ஆம் தேதிக்கு பதிலாக 15ஆம் தேதியே முதல்வராக பதவியேற்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பு நாள்

தீர்ப்பு நாள்

2011 மே 13ஆம் தேதிதான் தேர்தல் முடிவுகள் வெளியாயின. போயஸ் கார்டனே திருவிழா கோலமாக அப்போது காட்சி அளித்தது. அதைவிட உற்சாகம் இந்த மே 11ஆம் தேதி அரங்கேறியது. ரிசல்ட் தினத்தை தீர்ப்பு தினம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது என்கின்றனர்.

அமைச்சரவை மாற்றம்

அமைச்சரவை மாற்றம்

ஜெயலலிதா முதல்வர் ஆக பதவியேற்கும் போது சில அமைச்சர்கள் கழற்றிவிடப்படலாம். புதியவர்கள் சேர்க்கப்படலாம். புதிய அமைச்சரவை பதவி ஏற்பை ஐந்தாம் ஆண்டு ஆட்சி தொடங்கும் நாளான மே 16-ஆம் தேதி வைத்துக்கொள்ள முதலில் முடிவு செய்தார்களாம். ஆனால் அன்று சனிக்கிழமை கரிநாள் என்பதால் அதற்கு முதல்நாளே பதவியேற்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான கொண்டாட்டத்தைத் தாண்டி புதிய அமைச்சரவை தேதியும் அமைச்சர்கள் பட்டியலும்தான் தற்போது அதிக எதிர்ப்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அதேநேரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்க இருப்பதால் அமைச்சரவை பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

திக் திக் மனநிலையில்

திக் திக் மனநிலையில்

தனியாக இடைத்தேர்தல் நடத்துவதைவிட இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் சூட்டுடன் பொதுத்தேர்தலை நடத்திவிட்டால் என்ன என்றும் ஜெயலலிதா நினைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்குமோ? யார் தலை உருளப்போகிறதோ என்று திக் திக் மனநிலையோடு உள்ளனர் அமைச்சர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+