அமோக வெற்றி பெற வைத்த ஆர்.கே. நகர் வாக்காள பெருமக்களுக்கு நன்றி, நன்றி, நன்றி: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததற்காக முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே அதிமுக வேட்பாளரான ஜெயலலிதா முன்னிலை வகித்து வருகிறார். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

Jaya thanks RN Nagar voters for their love

இந்நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுயிருப்பதாவது,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்திற்கு நன்றி.

வாக்காளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவேன். வாக்காள பெருமக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப பாடுபடுவேன். நான் வெற்றி பெற பாடுபட்ட தோழமை கட்சி தலைவர்கள், கட்சி தொண்டர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்த ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி கிடைத்துள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+