செங்கோட்டை வீர வாஞ்சிநாதன் மணிமண்டபம்.. நாளை திறக்கிறார் ஜெ.
செங்கோட்டை: செங்கோட்டையில் கட்டப் பட்டுள்ள வீர வாஞ்சி நாதன் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை மதியம் 12 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைக்கிறார்.
இந்திய சுதந்திரத்திற்காக முதன் முதலில் ஆயுதம் ஏந்திஅப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷ் துறையை மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் களச்சாவு அடைந்த செங்கோட்டையை சார்ந்த வீரவாஞ்சிநாதனின் தியாகத்தை போற்றும் வண்ணம் அப்போதைய முதல்வர் காமராஜர் செங்கோட்டை முத்து சாமி பூங்காவில் வீரவாஞ்சி நாதனுக்கு மணி மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

அதன் பின் அதனை அனைவரும் மறந்த நிலையில் இப்பகுதி மக்கள்,வாஞ்சி இயக்கம்,என பல்வேறு அரசியல் கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்ததைத் தொடர்ந்து கடந்த ஆட்சியில் ரூபாய் 50இலட்சம் செலவில் வீர வாஞ்சி நாதனுக்கு மணிமண்டபம் அமைக்க முடிவு செய்து நிதியும் ஒதுக்கப் பட்டு பணிகள் நடந்து முடிந்தன.

கடந்த சில ஆண்டுகளாகவே திறப்பு விழாவுக்கு காத்திருந்த மணிமண்டபத்தை தமிழக முதல்வர் நாளை மதியம் 12.மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைக்கிறார்.
இதற்க்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் செங்கோட்டையில் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications