ஜெயலலிதா அப்பல்லோவில் மயக்க நிலையிலேயே அனுமதிக்கப்பட்டார் - தமிழக அரசு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதியன்று மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: மூச்சுத்திணறல் காரணமாக மயக்க நிலையில் ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் செப்டம்பர் 22ஆம் அனுமதிக்கப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலிதாவிற்கு 5 முறை சென்னை வந்து சிகிச்சை அளித்தனர். அது தொடர்பான அறிக்கையை இன்று டெல்லியில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் அளித்தனர்.
அப்பல்லோ மருத்துவமனையின் சிகிச்சை விபர அறிக்கையையும், எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையையும் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 10 மணிக்கு முதல்வரின் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்ப அவசர அழைப்பு வந்தது. ஆம்புலன்ஸ் சென்ற போது மயக்க நிலையில் ஜெயலலிதா இருந்தார் என்று அப்பல்லோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மயக்க நிலையில் ஜெயலலிதா
அப்பல்லோ வெளியிட்டுள்ள அறிக்கையில் போயஸ்கார்டனில் இருந்து ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தது முதல் அவருக்கு இருந்த நோய் தாக்கம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடித்துடிப்பு
செப்டம்பர் 22ஆம் தேதியன்று ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது நாடித்துடிப்பு 88 நிமிடம் ரத்த அழுத்தம் 140 / 70 என்று இருந்தது. அவரது ஆக்சிஜன் அளவும் குறைவாகவே இருந்தது.

நோய் தாக்கம்
ஜெயலலிதாவுக்கு ரத்த கொதிப்பு, நீரிழிவு மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருந்தன. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைப்பது மற்றும் நுரையீரல் பிரச்சனையை இருந்தது என்று அப்பல்லோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குரலை உணரவில்லை
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு ஆக்சிஜன் குறைபாடினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மயக்க நிலையில் இருந்த அவரால் யாருடைய அழைப்பையும் உணர முடியவில்லை என்று அப்பல்லோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதயத்துடிப்பு
ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். பின்னர் லண்டன் டாகடர் ரிச்சர்டும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தார். மேலும் தமிழக அரசு கேட்டு கொண்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர் என்றும் அப்பல்லோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications