மே 23- பிற்பகலில் ஜெ. முதல்வராக பதவியேற்கிறார்... சி.ஆர். சரஸ்வதி தகவல்
சென்னை: அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக மே 23-ந் தேதி பிற்பகல் பதவியேற்க இருப்பதாக அக்கட்சியின் பேச்சாளர் நடிகை சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மே 22-ந் தேதி காலை 7 மணிக்கு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
On the afternoon of May 23, Amma (Jayalalithaa) will be taking charge as the CM: CR Saraswathi (AIADMK, Spox) pic.twitter.com/WgkrBgDFtr
— ANI (@ANI_news) May 20, 2015 இருப்பினும் மே 22-ந் தேதியே ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பாரா? அல்லது மே 23-ந் தேதி பதவி ஏற்பாரா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அண்ணா தி.மு.க.வின் பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி, மே 22-ந் தேதி முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வார்; மே 23-ந் தேதி பிற்பகல் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பார் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications