போலீஸ் மீதான தாக்குதல் குறித்து ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது : அமைச்சர் ஜெயக்குமார்
போலீஸ் மீதான தாக்குதல் குறித்து ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : போலீஸார் மீதான தாக்குதல் குறித்து ரஜினி தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று சேப்பக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர்.

இந்நிலையில், சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என்று, ரஜினி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், வன்முறை கலாச்சாரத்தை கிள்ளி எறியவில்லை என்றால் பேராபத்து என்றும் நடிகர் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், போலீஸார் மீதான தாக்குதல் குறித்த ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது.
எந்தபிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. தமிழக அரசு ஒரு போதும் வன்முறையை ஏற்காது. போராட்டத்தில் காவல்துறையினரை தாக்கியவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டில் தமிழகம் கலந்துகொள்ளாததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்கு தேவையில்லாத விளக்கங்கள் கற்பிக்க வேண்டாம் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications