அ.தி.மு.,க.வை வெல்ல முடியாததால் தான் எதிர்கட்சிகள் பின்வாங்கின.. ஆர்.கே.நகரில் ஜெ. அனல் பிரச்சாரம்..
சென்னை: தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே தனது லட்சியம் என்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா கூறினார்.
ஜூன் 27ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ஜெயலலிதாவை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் ஆர்.கே.நகரில் இன்று (திங்கட்கிழமை) பிரச்சாரத்தை துவங்கிய ஜெயலலிதா திருவொற்றியூரில் வாக்கு சேகரித்தார்.
பல்லாயிரக்கணக்கான தொண்டர்களிடையே அவர் பேசியதாவது...

இந்த இடைத்தேர்தல் நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல். அரசியல் சதி காரணமாக சில காலம் முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. அ.தி.மு.,க.வை வெல்ல முடியாது என்பதால் தான் இந்த இடைத் தேர்தலில் எதிர்கட்சிகள் பின்வாங்கி விட்டன
யாரையும் குறை சொல்லி வாக்கு சேகரிக்க வரவில்லை. எங்களின் சாதனைகளை கூறியே வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்...எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்களின் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்வேன். எனவே இந்த இடைத்தேர்தலை வரவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக கொண்டு வாக்களியுங்கள்.
உங்களின் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் நாமம் வாழ்க..
இவ்வாறு பேசிய ஜெயலலிதா தனது உரையை முடித்தார்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications