ஜெ.மரணம்.. சகாயம் விசாரணை கோரிய மனுவை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 75 நாள்கள் சிகிச்சை மேற்கொண்டபோது அவரை சந்திக்க சசிகலா தரப்பு யாரையும் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார். இதைத் தொடர்ந்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பொதுமக்களும், தொண்டர்களும் நம்புகின்றனர். அதேபோல் அவரது மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரியுள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாஜி ஐஏஎஸ் அதிகாரி பாலமுருகன் வழக்கு பதிவு செய்திருந்தார்.
அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஒத்தி வைத்தது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications