மருத்துவமனையில் சேர்க்கும் முன்பாகவே ஜெ. உடலில் ஏகப்பட்ட நோய்கள்.. அப்பல்லோ அறிக்கை
ஜெயலலிதாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தபோது, அவருக்கு பல நோய்கள் ஏற்கனவே இருந்தது தெரியவந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவிக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தபோது, அவருக்கு பல நோய்கள் ஏற்கனவே இருந்தது தெரியவந்ததாக அப்பல்லோ அறிக்கையை மேற்கோள் காட்டி தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தனை நாட்களாக மூடி வைக்கப்பட்டிருந்த இந்த தகவல்கள் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் உண்ணாவிரத எச்சரிக்கைக்கு பிறகு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டபோது அவருக்கு, உடல்பருமன் (Obesity), உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடு செய்யப்படாத நீரிழிவு, ஆஸ்துமா போன்ற வியாதிகளால் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. நீர்ச் சத்து குறைபாடு இருப்பதும் தெரியவந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications