4 ஆண்டுகளில் நாலாபுறமும் வளர்ச்சி.. மின்வெட்டே இல்லாத நிலை... சுதந்திர தின விழாவில் ஜெ. பெருமிதம்
சென்னை: தமிழகத்தில் 4 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் நாலாபுறமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் மின்வெட்டே இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 69 ஆவது சுதந்திரம் தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் ஆற்றிய சுதந்திர தின உரை:
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற இலட்சியத்திற்காக அரசு செயல்படுகிறது. 4 ஆண்டுகளில் கிட்டதட்ட 6 லட்சம் பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற்றனர்.
நான்காண்டு வளர்ச்சியில் நாலாபுறமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் தமிழகத்தில் மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீர நெஞ்சங்கள் மற்றும் தலைவர்கள் அனைவரையும் நினைவு கூறுவதற்காக இந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம். சுதந்திரத்தின் அச்சாணியாக விளங்குவது பொருளாதார சுதந்திரம்.
கடந்த 4 ஆண்டுகளில் 54 கல்லூரிகள் துவங்கப்பட்டு கல்வி வளர்ச்சிக்கும், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ. 11,000 ஆக உயர்த்தப்படும். வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுசகோதரர்கள் உள்ளிட்டோரின் வழிதோன்றல்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூபாய் 4,500 லிருந்து ரூபாய் 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications