ஜெ. சொத்து என்ன மைசூர் பாகா.. ஆளாளுக்கு பங்கு கேட்கிறார்களே!
ஜெயலலிதாவின் சொத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று ஜெயலலிதாவின் சகோதரர் மைசூர் வாசுதேவன் தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் சொத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று ஜெயலலிதாவின் சகோதரர் மைசூர் வாசுதேவன் உரிமை கொண்டாடினார்.
ஜெயலலிதா இறந்தாலும் அவரது வாரிசு யார் என்பதில் நாளுக்கு நாள் சிக்கல்கள் நீடித்து கொண்டே இருக்கிறது. இதில் தீபக், தீபா, அமிர்தா வரிசையில் ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு புறப்பட்டுள்ளார் ஜெ.வின் மாற்றாந்தாயின் மகன் மைசூர் வாசுதேவன்.
இதுகுறித்து அவர் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் எனது அப்பா ஜெயராமனுக்கு இரு மனைவிகள். அதில் முதல் மனைவியின் மகன்தான் நான். என் அம்மா இறந்தவுடன் இரண்டாவதாக சந்தியாவை அவர் திருமணம் செய்து கொண்டார்.

பொருளாதாரம் மோசம்
என்னை பராமரிக்காமல் விட்டு விட்டனர். இவர்களுக்கு ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பிறந்தனர். ஜெயலலிதா என்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை. இதற்கு காரணம் சசிகலாதான். எனது பொருளாதார நிலையை சரி செய்ய எனக்கு ஜெயலலிதாவின் சொத்துகளில் பங்கு தேவைப்படுகிறது. இதற்காக சட்டப்படி அணுகியுள்ளேன்.

35 ஆயிரம் கோடி
அவர் எங்கெல்லாம் சொத்து வைத்திருக்கிறார் என்பதுகூட எனக்கு தெரியாது. ஜெயலலிதா ரூ.35 ஆயிரம் கோடியை விட்டு சென்றுள்ளார் என்று கூறுகிறார்கள். ஜெயலலிதா சாவுக்கே சசிகலாதான் காரணம் என்ற போது அந்த 35 ஆயிரம் கோடியை அவர் கூட வைத்திருக்கலாம்.

ஜெ.வின் மகள் அல்ல
ஜெயலலிதாவின் சொத்தை 4 பங்காக போட வேண்டும். அதில் எனக்கும், தீபா, தீபக், அமிர்தா ஆகிய 4 பேருக்கும் சரிசமமாக பிரித்து கொடுக்க வேண்டும். ஜெயலலிதாவின் சகோதரி சைலஷாவின் மகள் அமிர்தா.

பிறந்த குழந்தை
அவர்தான் தற்போது ஜெயலலிதாவின் வாரிசு என்று கூறிவருகிறார். ஆனால் அவர் ஜெ.வின் மகள் அல்ல. ஆனால் சோபன்பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்த குழந்தை உள்ளது. அது யார் என்று எனக்கு தெரியாது. ஒரு வேளை ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு வந்துவிட்டால் சொத்து முழுதும் அவருக்குதான் சேர வேண்டும் என்றார் வாசுதேவன்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications