ஜெயலலிதா, சசிகலா சம்பந்தப்பட்ட அனைத்துமே மர்மம் தானே? போட்டுத் தாக்கும் ராமதாஸ்
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு 90-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட பிரம்மாண்ட பங்களா உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது அவ்வப்போது அங்கு சென்று ஓய்வு எடுப்பார்.
மிகுந்த பாதுகாப்பு நிறைந்த இந்த கொடநாடு எஸ்டேட்டில் தனியார் நிறுவனம் மூலம் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களை தவிர யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் எளிதில் நுழைந்துவிட முடியாது

பாதுகாப்பு நிறைந்த கொடநாடு
அந்த அளவிற்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியாக கொடநாடு எஸ்டேட் திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கொடநாடு எஸ்டேட் களை இழந்துள்ளது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. எனவே அபராத தொகை வசூலிக்க கொட நாடு எஸ்டேட் கையகப்படுத்தப்படும் என கூறப்பட்டது.

பல கோணங்களில் விசாரணை
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 10-வது நுழைவு வாயிலில் இருந்த காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
|
அனைத்துமே மர்மம் தானே
இந்நிலையில் அரசியல் நிலவரங்களை டிவிட்டர் பக்கத்தில் போட்டு தனது பாணியில் கிழித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கொலை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கொடநாடு பங்களா கொலையாளி கொலையில் மர்மம் நீடிப்பதாக வெளியான தகவலை பதிவிட்டுள்ள ராமதாஸ், ஜெயலலிதா சசிகலா சம்பந்தப்பட்ட அனைத்துமே மர்மம் தானே என்று கூறியுள்ளார்.

ஆச்சரியம் இல்லை
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மமே இன்னும் விலகாமல் உள்ளது. இந்நிலையில் அவரது பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்டிருப்பதிலும் மர்மம் நீடிப்பதில் ஆச்சரியம் இல்லை என்பது போல் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் காவலாளி என்பதையும் ராமதாஸ் கொலையாளி என்றே குறிப்பிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications