15வது சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கியது: பரஸ்பரம் வணங்கிக்கொண்ட ஜெ.-ஸ்டாலின்!
சென்னை: 15வது தமிழக சட்டசபையின் முதலாவது கூட்டம் இன்று தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதாவும், திமுக சட்டசபை குழு தலைவர் ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.
சமீபத்தில் முடிவடைந்த 15வது சட்டசபை தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து புதிய சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

உடல் நலக்குறைவால் மரணமடைந்த அதிமுகவின் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ சீனிவேலுக்கு அவை தொடங்கியதும், உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, சட்டசபைக்குள் முதல்வர் ஜெயலலிதாவும், திமுக சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலினும் பரஸ்பரம் புன்னகையோடு வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். இதை பத்திரிகையாளர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
ஜெயலலிதா அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். இருப்பினும் அவருக்கு 12வது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டிருந்ததற்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, வேண்டுமென்றே ஸ்டாலினை அவமதிக்கவில்லை என்றும், ஸ்டாலினுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்பதாகவும், ஜெயலலிதா நேற்று விளக்க அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சட்டசபையில் இன்று, இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டது, ஆரோக்கிய சட்டசபை செயல்பாட்டுக்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது.
சீனிவேலுக்கு அஞ்சலி செலுத்தியதும், உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை, பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலில் முதல்வர் ஜெயலலிதாவும், அவரை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆளும் கட்சியினரும், சட்டசபை உறுப்பினர்களாக, பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
அனைத்து உறுப்பினர்களும் பதவி பிரமாணம் செய்ததும் அவை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படும். அன்றைய தினம் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வுகள் நடைபெறும்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications