ஜெ. சிகிச்சை படத்தை வெளியிடக் கூடாதுன்னு ஜெ.வே சொன்னாராமே.. புகழேந்தி அப்படித்தான் சொல்கிறார்!
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோவை ஏன் வெளியிடவில்லை என தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
நாகை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோவை ஏன் வெளியிடவில்லை என தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் புகைப்படத்தை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் வெளியிடப்படவில்லை.

மத்திய அமைச்சர்கள், ஆளுநர், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கும் மருத்துவமனயில் ஜெயலலிதாவை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்தார்களா இல்லையா என முன்னுக்குப் பின் முரணாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நாகையில் அதிமுகவின் 47 வது தொடக்க விழாவில் அதிமுக கர்நாடக மாநில செயலாளரும், தினகரன் சசிகலாவின் தீவிர ஆதரவாளருமான புகழேந்தி கலந்துகொண்டார். அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படத்தை ஏன் வெளியிட வில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.
அதாவது ஜெயலலிதா சிகிச்சைபெறும் படத்தை வெளியிட்டால் தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதால் அவரது படம் வெளியிடப்படவில்லை என்றார். தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதாலேயே தனது புகைப்படத்தை வெளியிடக்கூடாது என ஜெயலலிதா ஆளுநருக்கு கடிதம் எழுதியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் புகைப்படங்களை வெளியிட வேண்டும் என சசிகலாவிடம் தாங்கள் போராடி வருவதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications