பத்ம விபூஷண் விருது மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் சாந்தா - ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வான அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் வி.சாந்தாவுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று வாழ்த்துத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி:

இந்த ஆண்டிற்கான பத்மவிபூஷண் விருதுக்குரியவராக கௌரவிக்கப்பட்டுள்ளதற்கு, எனது சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Jayalalitha wishes to Dr Shantha on winning Padmabhusan award

தங்களுக்கு பத்மவிபூஷண் விருது வழங்க வேண்டும் என தமிழக அரசு பரிந்துரை செய்ததை, மத்திய அரசு ஏற்றுக்கொண்டது தமக்கு பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக புற்றுநோயைத் தடுப்பதற்கும், சுயநலமற்ற வகையில் அர்ப்பணிப்பு உணர்வோடு மருத்துவம் பார்த்துவரும் தங்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதுக்கு தாங்கள் முற்றிலும் தகுதியானவர்.

தங்களது சேவையின் காரணமாக, பல லட்சம் நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர். அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்துக்கு இந்திய அளவில் அங்கீகாரம் ஏற்படுத்தித் தந்ததற்காக தமிழகம் பெருமைப்படுகிறது. அதற்காக மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+